Search

SEGU

Oct 21, 2025

உள்ளூர்

மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 4 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன. 

மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் இந்த மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 42 ஆகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp