
Rebecca
Jan 27, 2026
உள்ளூர்
புகையிரதத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் - மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்கையை மீறி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






