Search

janani

Apr 9, 2026

உள்ளூர்

நிலக்கரி ஊழலில் பல கோடி ரூபாய் இழப்பு!

நிலக்கரி ஊழல் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரால் இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் நிலக்கரி ஊழலால் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் இந்த இழப்புகளை கணக்கிட்டு ஆராயும் போது, மொத்த நஷ்டம் 10,000 கோடி ரூபாயைத் தாண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் நிலக்கரிக்காக மட்டும் 220 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி ஏற்றி வந்த 9 கப்பல்கள் தொடர்பான பிரச்சினையால் 141 மில்லியன் யூனிட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு யூனிட் மின்சாரத்தை டீசல் மூலம் உற்பத்தி செய்ய 125 ரூபாய் செலவாகிறது. அதன்படி, 141 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மேலதிக செலவு ஏற்படும் என அவர் விளக்கமளித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All