
admin
May 13, 2026
உள்ளூர்
கொழும்பில் சந்திப்பு: இந்திய உயர்ஸ்தானிகர் & எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் (India House) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையின் தற்போதைய சமகால அரசியல் நிலைமைகள், பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





