Search

Rebecca

Jan 8, 2026

உள்ளூர்

மதுகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுவிப்பு!

மதுகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க மதுகம பிரதான நீதவான் எம்.என்.எம். நாநாயக்கார இன்று (08) உத்தரவிட்டார்.

தவிசாளர் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக மதுகம பிரதேச சபையின் செயலாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிற்கு அமைய, கடந்த 02ஆம் திகதி மாலை சந்தேகநபரான தவிசாளரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, சந்தேகநபரை இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All