
admin
Mar 6, 2026
உள்ளூர்
குஷ், ஹஷீஸ் கடத்திய நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 590 கிராம் குஷ் மற்றும் 4 கிலோ 910 கிராம் ஹஷீஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





