Search

admin

Jul 12, 2026

உள்ளூர்

வத்தளை சுற்றிவளைப்பில் பெரும் போதைப்பொருள் வேட்டை!


வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது குறித்த பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All