Search

admin

Apr 16, 2026

உள்ளூர்

வர்த்தகர்களுக்கு எதிராக தொடரும் சட்ட நடவடிக்கை

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ம் திகதி  வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளின் மூலம் 400-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சோதனைகள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All