
janani
Mar 23, 2026
உள்ளூர்
அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் மீது சட்ட நடவடிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோர், உள்ளூர் டெண்டர்களை (Local Tenders) தன்னிச்சையான முறையில் கையாண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தை விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தங்களை அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





