Search

Rizi

Oct 3, 2025

உள்ளூர்

தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் பாராளுமன்றத்தில் 2025 செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்றதாகவும், ஆனால் அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

 

இந்த விவாதம் ஒரு விவாதத்துடன் மட்டுமே முடிவடைந்ததாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இதேபோன்ற திருத்தம் தேவைப்படுவதால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த சட்டமூலம் இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும், தேவையான திருத்தங்கள் இருப்பின் அவை பாராளுமன்றக் குழு கட்டத்தில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை திருத்த  சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை என்பதை அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp