Search

admin

Apr 13, 2026

உள்ளூர்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (13.04.2026) மாலை 4:00 மணி முதல் நாளை (14.04.2026) மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும்.

கண்டி மாவட்டம்: யட்டிநுவர

கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All