Search

Rebecca

Nov 30, 2025

உள்ளூர்

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக முழு உபநிலைய வளாகமும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டது.

நேற்று (29) மாலையாகும்போது நீர்மட்டமானது கட்டுப்பாட்டுப் பலகை மட்டத்தை அடைந்துள்ளதால், நிலைமை பாதுகாப்பான செயற்பாட்டு வரம்புகளை மீறியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp