
admin
Mar 31, 2026
உள்ளூர்
"கம்பன் புகழ் பாடும் கதிரவன்” மட்டக்களப்பில் கம்பன் விழா.

இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான 2ஆம் ஆண்டு கம்பன் விழா, மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் திரு. த. இன்பராசா அவர்களின் தலைமையில், கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட காலை அமர்வு அயோத்தி அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், Sri Lanka Got Talent – Season 03 நிகழ்ச்சியில் தனது அசாதாரணமான மனக்கணித திறமையால் அனைவரையும் கவர்ந்த 07 வயது சிறுமி காவியஸ்ரீ சுப்ரமணியம், மாவட்டத் தேர்வுகள், தேசிய நடுவர் சுற்றுகள், Cull Round, Quarter Finals மற்றும் Semi Finals ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்து, பொதுமக்களின் வாக்குகளின் மூலம் Pre-Finals நிலைக்கு முன்னேறியுள்ளார்.
இவரது சிறப்பான சாதனையைப் பாராட்டி, “மனிதக் கணிப்பான்” (Human Calculator) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களும் இச் சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





