
janani
Mar 30, 2026
உள்ளூர்
கமல் அமரசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்தமை மற்றும் வாகனங்களின் சேஸ் (Chassis) இலக்கங்களை மாற்றியமைத்து சட்டவிரோதப் பதிவுகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று குருணாகல் - பிலெஸ்ஸ (Pilessa) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 10-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





