
puja
Jul 29, 2026
உள்ளூர்
நீதிபதிகள் ஓய்வுவயது விவகாரம் – சட்டத்தரணிகள் இன்று கூடினர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த பொதுச் சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் குழு மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, சட்டத்தரணி உதய கம்மன்பில, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





