Search

Dec 1, 2025

உள்ளூர்

ஜப்பானின் விசேட மருத்துவர்கள் குழு இலங்கைக்கு வந்தடைவு!

இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய அனர்த்த நிலையை முன்னிட்டு, அவசர மருத்துவ சேவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு இலங்கை நாட்டை வந்தடைந்தது.

ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யு.எல் - 455 விமானத்தில் பயணித்த இந்த குழு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை 7.00 மணியளவில் வந்தடைந்தது.

5 ஜப்பானிய சிறப்பு மருத்துவர்களுடன், ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் தற்போது நிலவும் மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சை திறன், மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய துறைகளை விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவி, நவீன உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவ ஆதரவு தொடர்பான முழுமையான அறிக்கை ஜப்பான் சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All