
janani
Mar 23, 2026
உள்ளூர்
ஈரான் தூதுவர் இலங்கைக்கு கொடுத்த உறுதி

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், மசகு எண்ணெய் அல்லது ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு ஈரான் எந்நேரமும் தயாராக உள்ளது. இலங்கை மக்கள் எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்வதை ஈரான் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





