
Rebecca
Feb 16, 2026
உள்ளூர்
சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டி வீரர்கள் நாட்டிற்கு வருகை

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டியில் (International Professional Sports Tournament) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
உலகில் 143 நாடுகளைச் சேர்ந்த 24,000 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் இப்போட்டித் தொடர் 02/06 முதல் 02/15 வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 34 இலங்கை விளையாட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள், 40 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற இந்த இலங்கை மெய்வல்லுநர் குழுவினர் அபுதாபியில் இருந்து 'ஏர் அரேபியா' (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான 3L-307 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 09.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






