
janani
Apr 6, 2026
உள்ளூர்
இந்திய திரைப்பட நடிகை சுபாஷினி காலமானார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.
நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் இந்திய தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆவார்.குடும்ப தகராறு காரணமாக அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சுபாஷினியின் உடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





