
Rebecca
Feb 27, 2026
உள்ளூர்
இந்திய பெய்லி பாலங்கள் தொகுதி ஒப்படைப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்) அவர்கள் இன்று 214 தொன் எடையுடைய பெய்லி பாலங்களின் கூறுகள் அடங்கிய சரக்குத் தொகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தலைவர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
குறித்த பொருள் 24 பெப்ரவரி 2026 அன்று விசாகப்பட்டினத்திலிருந்து கொழும்புக்கு வந்தடைந்தது.
இப்பெய்லி பாலங்கள் வழங்குதல், ‘டிட்வா’ சூறாவளிக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் அறிவித்த அமெரிக்க டொலர் 450 மில்லியன் மதிப்பிலான விரிவான மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
இப்பாலங்கள் நாட்டின் பல இடங்களில் நிறுவப்படவுள்ளன. அவற்றை நிறுவுவதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகள் இந்திய இராணுவ பொறியாளர்களால், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு முன் இந்தியா இலங்கைக்கு நான்கு பெய்லி பாலங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவற்றில் இரண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மற்றும் ஏனைய இரண்டு கண்டி–ராகலா சாலையில் நிறுவப்பட்டன. இப்பாலங்கள் சவாலான நிலப்பரப்புகளில் இணைப்பை மீட்டெடுக்க முக்கிய பங்காற்றியதுடன், உள்ளூர் மக்களுக்கு அணுகலை மேம்படுத்தவும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் பெரிதும் உதவியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீளமைத்து, இணைப்பை மீட்டெடுத்து, சமூகங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், இந்தியா தொடர்ந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் பங்கெடுத்து வருகிறது.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






