
janani
Apr 22, 2026
உள்ளூர்
இந்த மாதம் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐக் கடந்துள்ளது.
இதன்படி, இம்மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களே முதலிடத்தில் உள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து 25,634 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 828,845 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையின் சுற்றுலாத் துறை இவ்வாண்டுக்கான 3 மில்லியன் இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





