Search

janani

Apr 6, 2026

உள்ளூர்

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இணையவழி நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் (Data Theft) அதிகரித்துள்ளதாகக் காவல்துறை பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு கால கொள்வனவுகளுக்காகப் பொதுமக்கள் அதிகளவில் இணையத்தைப் பயன்படுத்துவதைச் சாதகமாக்கிக்கொண்டு, சைபர் குற்றவாளிகள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள புகார்களின் அடிப்படையில், பின்வரும் நுட்ப முறைகள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான "புத்தாண்டு சலுகைகள்" மற்றும் பரிசுகள் என்ற பெயரில் போலி விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.

QR குறியீடு (QR Code) மோசடிகள், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக முன்னெடுக்கப்படும் பிஷிங் (Phishing) தாக்குதல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு அடையாளங்களை மாற்றியமைத்தல் (Caller ID Spoofing).

வங்கிகள் அல்லது வர்த்தக நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்றே தோற்றமளிக்கும் போலித் தளங்கள் உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்கள் திருடப்படுகின்றன.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி இவ்வாறான மோசடித் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All