
janani
Apr 26, 2026
உள்ளூர்
புதிய கல்வி ஆண்டிற்கான முக்கிய அறிவிப்பு!

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைப் பெற்றுள்ளனர்.
மார்ச் 31 ஆம் திகதி நள்ளிரவு வெளியான இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





