Search

admin

Mar 8, 2026

உள்ளூர்

அமைதிப் போராட்டத்திற்கு தடை : ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை

இன்று டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலை முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடுக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் குறித்த பெண்ணின் உடல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கனபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் குழந்தைவேல் ரவி, ஹட்டன் நகர சபை பிரதி நகரபிதா பெருமாள் சுரேந்திரன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்களுக்கு எதிராகவே இந்த நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All