Search

janani

Apr 5, 2026

உள்ளூர்

உர விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் உர விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 25,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.





Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All