Search

janani

Apr 9, 2026

உள்ளூர்

இன்றும் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்!

இன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

உள்ளகப் பயிற்சி பெற்றவர்களுக்கான மருத்துவ நியமனங்கள் அறிவிக்கப்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான புதிய சேவை இடங்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களினால் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அதிருப்தி காரணமாகவே இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இடமாற்றத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் கடந்த வாரத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது.

இதன்காரணம் நோயாளர்கள் பல பெரும் சிரமங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All