Search

janani

Apr 5, 2026

உள்ளூர்

சுகாதார அமைச்சருக்கு GMOA வழங்கிய அவகாசம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நாளை காலை 8.00 மணி வரை அவகாசம் வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் GMOA தெரிவித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அமைச்சர் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாகவே இந்தப் போராட்ட நடவடிக்கை நீடிப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

அமைச்சரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அடுத்தகட்ட தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All