Search

admin

May 29, 2026

உள்ளூர்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டமை தொடர்பில், அன்றைய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதன் தலைவர் பாஷ்வர குணரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவதாக இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட மனு ஒன்றின் ஊடாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் அறிவித்ததைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All