Search

Rebecca

Feb 25, 2026

உள்ளூர்

முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர் கைது

கடானா பிரதேச செயலகத்தில் பணியாற்றிய முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக தேசிய செயலகத்தினால் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் 10,000 ரூபா கல்வி உதவித் தொகையை, இரண்டு சிறுவர்களின் பெயர்களில் மோசடியாகப் பெற்றுக்கொண்டமை.

குறித்த பணத்தை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக (misappropriation) இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All