
admin
May 16, 2026
உள்ளூர்
சுன்னாகம் ரயில்வே கடவையில் அவசர பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார்.
சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் போக்குவரத்துக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





