Search

janani

Apr 9, 2026

உள்ளூர்

மின்சாரக் கட்டணம் மேலும் 15% அதிகரிக்க வாய்ப்பு!

தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அவதானம் செலுத்தியுள்ளது.


‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ (National System Operator Pvt Ltd) நிறுவனத்தினால் இந்த வருடத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாம் காலாண்டிற்காக இந்த மேலதிக கட்டண உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் 15 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், குறித்த யோசனை தொடர்பில் ஆணைக்குழு தற்போது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All