
janani
Apr 2, 2026
உள்ளூர்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

இன்று காலை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் "சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறைகளுக்கு" எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் சேர்ந்த மருத்துவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்வார்கள்.
எனினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமை போன்று இயங்குமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சுகாதார அமைச்சின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மீண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





