Search

janani

May 8, 2026

உள்ளூர்

வியட்நாம்–இலங்கை இரு நாடுகளுக்கும் நேரடி விமான சேவை!

வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் இணைந்து பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார். 

அதேநேரம் இருதரப்பு வர்த்தகம் 2030-ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

அதேநேரம் அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்த வியட்நாம் விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் குறிப்பிட்டார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All