
admin
Jun 1, 2026
உள்ளூர்
4 மாதங்களில் பிரதான எரிபொருட்களின் விலை உயர்வு விபரம்!

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் நடப்பு ஆண்டில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, மே 31 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5ஆவது முறையாகவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் மண்ணெண்ணெய் விலையானது 56.6 வீதத்தினால் (103 ரூபாய்) அதிகரித்து, அதிக சதவீத விலை உயர்வைப்பதிவு செய்துள்ளது.
அத்துடன் ஒக்டேன் 92 பெட்ரோல் 48.6 வீதத்தினாலும், சுப்பர் டீசல் 48 வீதத்தினாலும், ஒட்டோ டீசல் 46.9 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையும், மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 'ஹோர்முஸ் நீரிணையின்' (Strait of Hormuz) பாதுகாப்பு குறித்த அச்சமுமே உலகளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






