Search

Rebecca

Feb 21, 2026

உள்ளூர்

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதியை சந்தித்த பிரதியமைச்சர்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

திட்வா சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு பிரதி அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அத்துடன் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், அதிநவீன ‘பிளீட் பிராட்பேண்ட்’ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் வுர்-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All