Search

Rebecca

Mar 1, 2026

உள்ளூர்

அமைச்சர் குமார ஜயகொடி எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்

தற்போதைய எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெளியாகியுள்ள அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆணைக்குழுவிற்கு நேரில் சமூகமளித்து விடயங்களைத் தெளிவுபடுத்த அல்லது தனது சட்டத்தரணி ஊடாகக் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை எனவும், அதற்குப் பதிலாக விடயங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

எட்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான டெண்டர் மோசடி தொடர்பிலேயே அமைச்சருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All