Search

janani

Jul 15, 2026

உள்ளூர்

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All