Search

admin

Apr 18, 2026

உள்ளூர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு: சுமந்திரனின் விமர்சனம்

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பான சர்ச்சை காரணமாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை தாமாக முன்வந்து இராஜினாமா செய்துள்ளதை எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தினதும், தேசிய மக்கள் சக்தியினதும் (NPP) அணுகுமுறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தில் NPP உறுப்பினர்கள் அமைச்சரைப் பாதுகாக்கும் வகையில் வாக்களித்ததை சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி விவகாரத்தில் தவறு நடந்துள்ளதை ஏற்றுக்கொண்ட நிலையிலும், அமைச்சரை பதவியில் தக்கவைக்க முயற்சி செய்தமை கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமார ஜயகொடிக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) ஏற்கனவே வேறொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் சுமந்திரன் நினைவுபடுத்தியுள்ளார்.

ஆட்சியில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All