
admin
Mar 11, 2026
உள்ளூர்
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு இடம்பெற்றது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டத்துடன்,
சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் மற்றும் முதலீடு என்பவற்றிலே எரிபொருள் இறக்குமதி தங்கியுள்ளது. அதனால் இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை மற்றும் அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






