Search

admin

Mar 1, 2026

உலகம்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக முடக்கம் – ஈரானின் அதிரடி தீர்மானம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

ஈரானியத் தாக்குதல்களால் இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All