Search

Rebecca

Feb 27, 2026

உள்ளூர்

‘கமாண்டோ சலிந்த’ மார்ச் 12 வரை விளக்கமறியலில்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் கருதப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ‘கமாண்டோ சலிந்த’, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (27) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All