
Rebecca
Dec 31, 2025
உள்ளூர்
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்பு சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் புது வருட பிறப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு மரியாள் தேவாலயம், தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயம், ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம் மற்றும் மெதடிஸ்;த தேவாலயம் ஆகியவற்றுக்கு பொலிஸ் இராணுவ விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பிரிவினர் தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்பு கடமைககளில் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க முடிகின்றது.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






