Search

Rebecca

Dec 24, 2025

உள்ளூர்

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All