
janani
Mar 28, 2026
உள்ளூர்
பெருந்தோட்ட மாணவர்களுக்கு CEWET புலமைப்பரிசில்கள்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்கள் அல்லது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்பக் கல்வியினைத் தொடரும் மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பப் படிவங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையதளமான www.hcicolombo.gov.in இலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அத்துடன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்அல்லது கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





