Search

Rebecca

Dec 16, 2025

உள்ளூர்

சீ.பி.ரத்னாயக்கவிற்கு பிணை

நிதிச் சலவை சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடையதாக அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All