Search

Rebecca

Feb 11, 2026

உள்ளூர்

போரதீவு பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் நேற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதற்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்வி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு, சுகாதாரம், விவசாயம், கால்நடை, நீர்பாசனம், போக்குவரத்து, யானை மனித மோதல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன

இதன்போது மேலும் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All