Search

Rebecca

Dec 3, 2025

உள்ளூர்

நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது

முதன்முறையாக, பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 சரக்கு விமானம் இன்று (03) மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானம் 9,227 கிலோகிராம் மருந்துகள், உலர் உணவு, நுளம்பு வலைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு உபகரணங்களை குறித்த விமானம் கொண்டு வந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஆண்டிலிப் இலியாஸ், தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All