
Rebecca
Jan 9, 2026
உள்ளூர்
பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) முற்பகல் 11 மணிக்கே விடுமுறை வழங்கி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு தொடர்பான விசேட எச்சரிக்கை அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






