
janani
Mar 25, 2026
உலகம்
குளிர்சாதனப்பெட்டிக்குள் பிறந்த குழந்தை - பெற்றோர் மீது அதிரடி வழக்கு

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதனப்பெட்டிக்குள் (Fridge) மூன்று மாதக் கருவை மறைத்து வைத்திருந்த தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த இந்தத் தம்பதியினரிடம் தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் வசித்து வரும் 23 வயது இளைஞரும், 28 வயது பெண்ணும் கடந்த ஓராண்டாகத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது வீட்டில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அந்த குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள், சுமார் 3 முதல் 4 மாதங்கள் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்த கரு ஒன்றைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
விசாரணையின் போது, கடந்த மார்ச் 20ஆம் திகதி இரவு குறித்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அப்போது கழிவறையில் வைத்துத் தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





