
admin
Jul 22, 2026
உள்ளூர்
தரம் 9 மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சை புதிய திகதி அறிவிப்பு!

தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள் பரீட்சையை நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பாடம் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இதுவரையில் வினாத்தாள்கள் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படாததால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வலயத்தின் அனைத்து அதிபர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






